முட்டுவேன்!
சபர்மதி ஆசிரமத்திற்கு ஒருவர் அடிக்கடி வந்து வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பார். ஒருமுறை அவர், ""எருமைப்பால் சாப்பிட்டால் நாமும் எருமை மாடு மாதிரி மந்தமாகி விடுவோம்! பசும்பால் சாப்பிட்டால் பசு மாதிரி ச
சபர்மதி ஆசிரமத்திற்கு ஒருவர் அடிக்கடி வந்து வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பார்.
ஒருமுறை அவர், ""எருமைப்பால் சாப்பிட்டால் நாமும் எருமை மாடு மாதிரி மந்தமாகி விடுவோம்! பசும்பால் சாப்பிட்டால் பசு மாதிரி சாதுவாகி விடுவோம்..!'' என்று சொல்லிக் கொண்டே போனார்.
பொறுமையிழந்த காந்திஜி, ""இதோ பாருங்கள்... நான் ஆட்டுப்பால் சாப்பிடுகிறவன். நீங்கள் இப்படியே பேசிக்கொண்டே போனால் உங்களை ஒரு முட்டு முட்டி விடுவேன்!'' என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.