முகப்பு
சிறுவர்மணி

ஊக்கம்!

கவியரசு கண்ணதாசன் தனது 14 பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார். அவர்கள் பரீட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது அவரது வழக்கம். ஒருமுறை ஒரு மகன் பரீட்சையில் தோல்வியுற்றா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:37 PM
பகிர்:

கவியரசு கண்ணதாசன் தனது 14 பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார்.

அவர்கள் பரீட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது அவரது வழக்கம்.

ஒருமுறை ஒரு மகன் பரீட்சையில் தோல்வியுற்றான். அந்தச் சமயத்தில் பாஸ் செய்த மற்றவர்களுக்கெல்லாம் நூறு ரூபாய் கொடுத்த கவிஞர், தோல்வியடைந்தவனுக்கு 200 ரூபாய் பரிசாகக் கொடுத்தார்.

""இது என்ன நியாயம்?'' என்று மற்ற பிள்ளைகள் அவரைக் கேட்டனர்.

அதற்கு கண்ணதாசன், ""சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும்! ஆனால் துக்கத்திலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். அவர்களை மேலும் காயப்படுத்தாமலிருப்பதே உத்தமம்!'' என்றார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், 200 ரூபாய் பெற்ற அந்த மகன் இன்று டாக்டராக இருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →