விழுதாய் வாழ்வோம்!
படிக்கத் தெரியா எந்தன் அம்மா படிக்க வைத்தார்
படிக்கத் தெரியா எந்தன் அம்மா
படிக்க வைத்தார்
அன்று - அட
படித்து நானும் பட்டம் வாங்கி
பதவி பெற்றேன்
இன்று!
படிக்கத் தெரியா எந்தன் அம்மா
படித்து விட்டார்
இன்று - நான்
படித்து விட்டது போல அவரையும்
படிக்க வைத்தேன்
நன்று!
கடிதம் போட்டால் தானே படிக்கும்
படியாய்ப் படிப்பாள்
அம்மா - ஆம்
மடலும் கூட எழுதிப் பழகி
மகிழ்ந்து போவாள்
அம்மா!
எழுத்துக் கூட்டிப் படிக்கும் போதே
எந்தன் உள்ளம்
மகிழும் - அம்மாவை
விழுது போல நாளும் தாங்கி
வாழ வைப்பேன்
என்றும்!