முகப்பு
சிறுவர்மணி

குத்தாத முட்கள்

காலில் குத்தி இரணமாய்ப் பலமுள்கண்ணீர் முட்டும் வலியூட்டும்-எனும்மூலக் கருத்தின் முரணாய்ச் சிலமுள்

சிறுவர்மணி

குத்தாத முட்கள்

காலில் குத்தி இரணமாய்ப் பலமுள்கண்ணீர் முட்டும் வலியூட்டும்-எனும்மூலக் கருத்தின் முரணாய்ச் சிலமுள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:33 AM
பகிர்:

காலில் குத்தி இரணமாய்ப் பலமுள்

கண்ணீர் முட்டும் வலியூட்டும்-எனும்

மூலக் கருத்தின் முரணாய்ச் சிலமுள்

முன்னேற் றத்தின் வழிகாட்டும்!

வேகம் காட்டும் கருவியின் சிறுமுள்

விபத்து வருமுன் நினைவூட்டும்-தினம்

மேகம் தாண்டும் ஊர்தியின் திசையை

மின்காந்தப் பொறிமுள் முனைகாட்டும்!

தாழும் உயரும் தட்டை ஒருமுள்

தடுத்துத் தராசின் சமன்காட்டும்-அணி

சூழும் இசையின் தட்டில் விழும்முள்

சுவைக்கும் செவிக்கு அமுதூட்டும்!

காலம் முழுக்கச் சுழலும் இருமுள்

கடிகா ரத்தில் மணிகாட்டும்-நனி

ஞாலம் வெளுக்கப் "பேனா' முட்கள்

நலமாய் எழுத்துப் பணியாற்றும்!

முழு கட்டுரையைப் படிக்க →