பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கலென்று பாடுவோம் புத்தாடை அணிந்தேதான் கூடுவோம்
பொங்கலோ பொங்கலென்று பாடுவோம்
புத்தாடை அணிந்தேதான் கூடுவோம்
எங்குமே மகிழ்ச்சியினைத் தேக்குவோம்
ஏற்றமாய் இந்நாளை ஆக்குவோம்!
கரும்பாக இனித்தேதான் வாழுவோம்
கருத்தோடு நண்பருடன் சூழுவோம்
எறும்பாக உழைத்தேமுன் னேறுவோம்
எங்கும்தமிழ் என்பவரைச் சேருவோம்!
மஞ்சளிலே மகிமையைக் காணுவோம்
மறவாமல் கூட்டுறவை நாடுவோம்
கொஞ்சுகின்ற தமிழாலே பேசுவோம்
கொடுக்கின்ற கரம்கொண்டு வாழ்த்துவோம்!
அன்னையினை தந்தையினை போற்றுவோம்
அறிவளிக்கும் ஆசானை ஏற்றுவோம்
பண்பான வாழ்க்கையாக மாற்றுவோம்
பண்பில்லா பேர்களையும் மாற்றுவோம்!
இன்பத்தைப் பொங்கலிலே பொங்குவோம்
ஈடில்லா மகிழ்வோடே தங்குவோம்
அன்பினையே பொங்கலிலே பொங்குவோம்
அழகான கல்வியிலே தங்குவோம்!