முகப்பு
சிறுவர்மணி

திருக்குறள்

 திருக்குறள்' நீதி நூலாகும் - அது தெய்வத்தின் குரலைப் போலாகும்!

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:58 PM
பகிர்:

 திருக்குறள்' நீதி நூலாகும் - அது
 தெய்வத்தின் குரலைப் போலாகும்!
 
 அறம், பொருள், இன்பம் பகுப்பாகும் - இந்த
 மானுட வாழ்க்கையின் தொகுப்பாகும்!
 
 பதின்மர் அதற்கு உரைகண்டார் - அதைப்
 படித்தோர் கருத்தின் கரைகண்டார்!
 
 நாடு, மொழி, இனம் இதற்கில்லை - நல்ல
 அன்பும் ஒழுக்கமும் அதற்கெல்லை!
 
 எத்தனை மொழியில் மொழிபெயர்ப்பு - அவை
 அத்தனையும் தமிழின் பெருஞ்சிறப்பு!
 
 கற்று நடப்பவர் சிறந்தோராம் - பாரில்
 கல்லார் தம்மை மறந்தோராம்!
 
 "உலகப் பொதுமறை' அதன்பேராம் - புவி
 உவந்து அளித்த நற்சீராம்!
 
 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்
 பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.