தீபாவளித் திருநாள்!
தீமைகள் அகன்ற ஒருநாளாம் - அது "தீபா வளி'யெனும் திருநாளாம்!
தீமைகள் அகன்ற ஒருநாளாம் - அது
"தீபா வளி'யெனும் திருநாளாம்!
எண்ணெய் தேய்த்துக் குளித்திடுவார் - அன்று
யாவரும் சேர்ந்தே களித்திடுவார்!
ஆடைகள் புதிதாய் அணிந்திடுவார் - கூடி
அவரவர் தெய்வத்தைப் பணிந்திடுவார்!
சுவையாய் உணவுகள் உண்டிடுவார் - தங்கள்
சுற்றம் நட்பையும் கண்டிடுவார்!
செய்திகள் அனுப்பி வாழ்த்திடுவார் - நல்ல
செயலால் மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவார்!
வீடுகள், தெருக்களில் வெடியோசை - எங்கும்
பெரியவர், சிறியவர் கரஓசை!
ஒற்றுமை, அன்பை முன்னோர்கள் - இன்று
கற்றுக் கொள்ளவே சொன்னார்கள்!
உணவும், உடையும், இருப்பிடமும் - இதுபோல்
தினமும் கிடைத்திட வழிகாண்போம்!
இருளை வாழ்வில் விரட்டிடுவோம் -நல்ல
பொருளை உழைத்தே திரட்டிடுவோம்!
வருடம் தோறும் வரவேண்டும் - இந்நாள்
வாழ்வில் நலங்கள் தரவேண்டும்.