ஆமையாரு!
தரைமேலே பாறைபோலநகர்வது யாரு? - அவர்
தரைமேலே பாறைபோல
நகர்வது யாரு? - அவர்
தவழத் தவழ நடந்துவரும்
ஆமையாரு!
முதுகில் என்ன மூட்டையைக்
கொண்டு போறாரு? - அது
ஓடு என்னும் பாதுகாப்பு
கவசம் பாரு!
எதிரிவந்தால் ஓட்டுக்குள் ஏன்
ஒளிஞ்சுக்கிறாரு? - எங்கும்
வம்பு தும்பு கூடாதென்று
நினைக்கிறாரு!
முயலை அன்று எப்படித்தான்
ஜெயிச்சு வந்தாரு? - விடா
முயற்சியின் ரகசியத்தைத்
தெரிஞ்சுக்கிட்டாரு!
தண்ணீரைக் கண்டதும் ஏன்
இறங்கிவிட்டாரு? - காலை
நீட்டித்தான் அவரங்கே
நீந்தப் போறாரு!