ஆலமரம்
ஆல மரமாம் ஆலமரம்அழகாய் வளர்ந்தே நிற்கும் மரம்!
ஆல மரமாம் ஆலமரம்
அழகாய் வளர்ந்தே நிற்கும் மரம்!
சாலை வழியில் நடப்போர்க்குத்
தங்கும் இடமாய் இருக்கும் மரம்!
சுட்டுப் பொசுக்கிடும் வெய்யிலிலே
சுகமாய் இருந்திட நிழல்கொடுக்கும்!
கொட்டும் மழையில் நனையாமல்
குந்தி இருந்திட குடைபிடிக்கும்!
குருவிகள் உண்ணப் பழம்கொடுக்கும்
குந்தி உறங்கிட கிளை கொடுக்கும்!
அரித்தே மண்ணைக் கரைக்காமல்
ஆற்றுக் கரைக்குப் பலம்கொடுக்கும்!
ஆடுகள் தின்னத் தழைகொடுக்கும்
அடுப்புச் சுள்ளி அதுகொடுக்கும்!
ஆடும் ஊஞ்சல் விழுதிருக்கும்
ஆடிட ஆசை சிறுவருக்கும்!
ஆன்றோர் வாழ்த்துக் கூறுவதும்
ஆல்போல் தழைக்கணும் என்றேதான்!
சான்றோர் போற்றிடும் ஆல்போல
தம்பி, தங்கைகள் வாழணுமே!