ஆசிரியர்
அன்னை தந்தை இருவரைஅடுத்து நெஞ்சில் நிறைபவர்!
சிறுவர்மணிஆசிரியர்
அன்னை தந்தை இருவரைஅடுத்து நெஞ்சில் நிறைபவர்!
அன்னை தந்தை இருவரை
அடுத்து நெஞ்சில் நிறைபவர்!
அண்டிக் கற்க வருபவர்
அகத்தில் ஒன்றி உறைபவர்!
மண்ணில் மடமை இருளினை
மாற்றும் கடமை புரிபவர்!
கண்ணைத் திறந்து அறிவொளி
காட்டும் கருணைக் குரியவர்!
எண்ணை எழுத்தை பொறுமையாய்
எவர்க்கும் கற்றுத் தருபவர்!
என்ப தனால் இறைவனாய்
ஏற்றுப் போற்றப் பெறுபவர்!
பண்பை பணிவை பரிவுடன்
பலர்க்கும் புகட்டும் புரவலர்!
உண்மை ஒழுக்கம் பெருகிட
உழைத்து உழைத்துக் கரைபவர்!
சின்னச் சின்னப் பறவைகள்
சிகரம் தாண்டிப் பறந்திட
தன்னம் பிக்கைச் சிறகுகள்
தந்து வானாய் விரிபவர்!
தொண்டில் கல்விக் கரைதொட
தோணி யாகும் திருமகர்!
எண்ணும் வெற்றிப் பிறைதொட
ஏணி யாகும் பெருமகர்!