பிடித்த இடம்
அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசன் தமது ஆராய்ச்சியிலேயே எப்போதும் மூழ்கியிருந்தார்.
அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசன் தமது ஆராய்ச்சியிலேயே எப்போதும் மூழ்கியிருந்தார்.
ஒருநாள் அவரது மனைவி அவரிடம் ""நீங்கள் ஓய்வில்லாமல் ஆராய்ச்சிக் கூடத்தில் உழைக்கிறீர்கள். சிலநாளாவது உங்களுக்குப் பிடித்த இடத்திற்குச் சென்று ஓய்வெடுத்து வாருங்களேன்'' என்றார்.
""சரி யோசிக்கிறேன்'' என்றார் எடிசன்.
சிறிது யோசித்துவிட்டு தனக்குப் பிடித்தமான இடத்திற்குப் போனார். அது அவரது ஆராய்ச்சிக் கூடம்தான்!