சிறுவர்மணி

ஒளவையார் பொன்மொழிகள்

ஒருவனிடத்திலே காணப்படும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும்

DIN

* ஒருவனிடத்திலே காணப்படும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பலன் உண்டாகும்.
 
 * மிகவும் சிரமப்பட்டுப் பொருள் தேடிய போதிலும் விதிப்படியே அல்லாமல் சுகத்தை அதிகமாய் அனுபவிக்க இயலாது.
 
 * காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர்.
 
 * ஒருவன் பிறர் மேல் பழிச்சொற்களைச் சொன்னால் அவன் எல்லோருக்கும் பகைவனாவான்.
 
 * கோள் கூறப்படுவதைக் கேட்பவன் இல்லையாயின் கோள் சொல்பவனும் இல்லை.
 
 * மென்மையான சொற்களை வன்மையான சொற்களால் வெல்ல முடியாது. ஆனால் வன்மையான சொற்களை மென்மையான சொற்கள் வென்றுவிடும்.
 
 * சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம்.
 
 * எந்தச் செயலும் அதற்குரிய காலத்திலேயே செய்யப்பட வேண்டும்.
 
 * வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உறவினராவர்.
 
 * நல்லவரோடு நட்புக்கொண்டு பின்பு அவரை விட்டுப் பிரியாதீர்கள்.
 
 * ஈகைக் குணம் இல்லாதவர்கள் தம்மை வருத்திப் பறிப்பவர்களுக்குத் தம் பொருளைக் கொடுப்பாரேயல்லாமல் பெற்றோர் உறவினர் முதலியோர்க்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்.
 
 * அடக்கமுள்ளவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு நேரும்.
 
 * உங்கள் நண்பர்களிடமும் உங்கள் ஏழ்மை நிலையைப் பற்றிப் பேசாதீர்கள்.
 
 ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT