ஏமாந்து போவது மேல்!
ஒருசமயம் ஒருவன் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரிடம் வந்து, ""நான் வெளியூர்க்காரன். என்னிடமிருந்த பணமெல்லாம் திருட்டுப் போய்விட்டது. நான் ஊருக்குத் திரும்பிப்போக உதவி செய்யுங்கள்'' என்று கேட்டான்.
சிறுவர்மணிஏமாந்து போவது மேல்!
ஒருசமயம் ஒருவன் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரிடம் வந்து, ""நான் வெளியூர்க்காரன். என்னிடமிருந்த பணமெல்லாம் திருட்டுப் போய்விட்டது. நான் ஊருக்குத் திரும்பிப்போக உதவி செய்யுங்கள்'' என்று கேட்டான்.
ஒருசமயம் ஒருவன் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரிடம் வந்து, ""நான் வெளியூர்க்காரன். என்னிடமிருந்த பணமெல்லாம் திருட்டுப் போய்விட்டது. நான் ஊருக்குத் திரும்பிப்போக உதவி செய்யுங்கள்'' என்று கேட்டான்.
வித்தியாசாகர் அவனுக்கு தாராளமாகவே பணம் கொடுத்தார்.
பணம் பெற்றுக் கொண்டவன் வெளியே வந்து அங்கிருந்த தன் நண்பனிடம் ""இந்த வித்தியாசாகர் சரியான ஏமாளி. இவரை ஏமாத்தறது ரொம்ப சுலபம்'' என்று சொல்லிக்கொண்டு போனான்.
இவற்றை வித்தியாசாகரின் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டார். அதனால் மனம் வருந்தி ""நீங்க ஏன் இந்த மாதிரி எல்லாருக்கும் உதவி பண்ணி ஏமாந்து போறீங்க?'' என்று கேட்டார்.
""உதவி செய்யறபோது ஒவ்வொரு சமயம் இந்த மாதிரி ஏமாறத்தான் நேரும். இதற்காக ஒருத்தருக்கும் உதவாமே இருந்தால் உண்மையாகவே கஷ்டப்படறவங்களுக்கு உதவி கிடைக்காம போயிடும். பிறரை ஏமாத்தறதைவிட ஏமாந்து போறது எவ்வளவோ மேல்'' என்று பதில் அளித்தார் பண்டித வித்தியாசாகர்.