தலைகளின் விதி
பேரறிஞர் இராஜாஜி ஒருசமயம் தமது சகாக்களோடு இராமாயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
பேரறிஞர் இராஜாஜி ஒருசமயம் தமது சகாக்களோடு இராமாயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
""இராவணன் எவ்வளவோ வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால், பிறர் மனைவியைக் கவரும் புத்தி வந்ததினால் அழிவை அடைந்தான். இதுதான் தலைவிதி என்பது'' என்றார் ஒருவர்.
உடனே இராஜாஜி குறுக்கிட்டு ""இராவணனைப் பற்றி சொல்லும்போது தலைவிதி என்று சொல்லாதீர்கள். தலைகளின் விதி என்று சொல்லுங்கள். அவனுக்குத்தான் பத்துத் தலைகள் ஆயிற்றே'' என்றார்.