1. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி...
2. தூங்கும்போது வருவான்... தூக்கமெல்லாம் கலைப்பான்...
3. தினந்தோறும் கடிக்காமல் கடிக்கும். இதனுடன் பழகப் பழக நமது தலைக்கனம் அடங்கும்...
4. கிளைகள் விட்டு வளர்ந்த மரம், கீழே மண்ணில் முளைக்காத மரம்...
5. முரட்டுத் தோலில் முள் உடம்பு பெற்ற என்னை வெட்டித் தின்றால் விருந்துதான்....
6. கீழே விழுந்தால் கருப்பு, வாயில் போட்டால் இனிப்பு...
7. சின்ன மச்சான் குனிய வச்சான்...
8. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறு பந்து, வாயிலே போட்டால் தேன் பந்து...
9. பச்சையாய் விரிச்சிருக்கு, பருவம் கழிந்தால் மணிகள் குவியும்...
விடைகள்:
1. பிள்ளைக்கனி
2. கனவு
3. சீப்பு
4. மான் கொம்பு
5. பலாப்பழம்
6. திராட்சை
7. முள்
8. லட்டு
9. நெல்வயல்