வாய்"மை'க்கே சரி!
கி.வா.ஜ. இம்மை, மறுமை பற்றிச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது மைக் தகராறு செய்தது! மீண்டும் வேறொரு மைக் பொருத்தப்பட்டது.
கி.வா.ஜ. இம்மை, மறுமை பற்றிச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது மைக் தகராறு செய்தது! மீண்டும் வேறொரு மைக் பொருத்தப்பட்டது. அதுவும் சிறிது நேரத்தில் வேலை செய்யவில்லை. உடனே கி.வா.ஜ, ""இம்"மை'க்கும் வேலை செய்யவில்லை....மறு "மை'க்கும் வேலை செய்யவில்லை. எனவே வாய் "மை'...க்கு உங்கள் காதுகளைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்! என்று கூறியவுடன் கரகோஷம் அடங்க வெகு நேரமாகியது!