முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை: பாவமும், புண்ணியமும்!

ஒரு திருடன்! அவனைக் காவலர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி அவன் ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்!

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

ஒரு திருடன்! அவனைக் காவலர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி அவன் ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்! ஆசிரமத்திலிருந்த துறவி அவனைப் பார்த்துவிட்டார். 
""பசி உயிர் போகிறது'' என்றான் திருடன்.
துறவி தட்டுத் தடுமாறி அவனுக்கு சமைத்துப் போட்டார். அவன் திருடன் என்பது அவருக்குத் தெரியவில்லை. வயிறார உண்டான் திருடன்! வயிறு நிறைந்ததும் அவன் மனசாட்சி அவனை உறுத்தியது! துறவியின் கால்களில் விழுந்தான்! 
""ஐயா, நான் ஒரு திருடன்.....காவலர்களால் தேடப்படுபவன்!....உங்கள் கருணைக்கு நன்றி!''என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்! 
துறவி அதிர்ந்தார்! ஒரு திருடனுக்குப் போய் சமைத்துப் போட்டிருக்கிறோமே என்று மிகவும் வேதனைப் பட்டார். இந்தப் பாவிக்கு உதவி செய்தது சரியா என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எத்தனை பேரின் பொருளை அபகரித்தானோ! ஒரு வேளை தகாத மனிதனுக்கு உதவி செய்ததால் தன்னை பாவம் பீடிக்குமோ என பயந்தார். கடவுளை வேண்டினார். கடவுள் துறவியின் முன்னால் தோன்றி, ""இத்தனை வருட காலம் அவனுக்கு இந்த பூமியில் தங்க இடம் தந்து உணவும் தந்து நான் காத்திருக்கிறேனே!....நீ ஏன் வருத்தப்படுகிறாய்?.... நீ செய்தது மிகப் புண்ணிய காரியம்.....இப்போதுதான் அவன் திருந்தினான்! தன் திருட்டுத் தொழிலை விட்டுவிடுவதாக சபதமேற்றான்! என்னை மனமுருகப் பிரார்த்தித்தான்!'' ஒரு வேளை நீ அவனை விரட்டியிருந்தால்!....அவன் மனிதனாக மாற வாய்ப்பேது?...'' என்று கூறிவிட்டு மறைந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →