முகப்பு
சிறுவர்மணி

நம்பிக்கை!

முன்னொரு காலம்....ரோமாபுரியில் பவுலும், சீலாவும் வாழந்து வந்தனர். அவர்கள் இயேசுவின் சிறந்த பக்தர்கள்! அவர் புகழைப் பாடுவதும், அவரது போதனைகளை போதிப்பதையும் வழக்க்மாகக் கொண்டார்கள்!

சிறுவர்மணி

நம்பிக்கை!

முன்னொரு காலம்....ரோமாபுரியில் பவுலும், சீலாவும் வாழந்து வந்தனர். அவர்கள் இயேசுவின் சிறந்த பக்தர்கள்! அவர் புகழைப் பாடுவதும், அவரது போதனைகளை போதிப்பதையும் வழக்க்மாகக் கொண்டார்கள்!

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

முன்னொரு காலம்....ரோமாபுரியில் பவுலும், சீலாவும் வாழந்து வந்தனர். அவர்கள் இயேசுவின் சிறந்த பக்தர்கள்! அவர் புகழைப் பாடுவதும், அவரது போதனைகளை போதிப்பதையும் வழக்க்மாகக் கொண்டார்கள்! ஏனோ அவர்களை அரசுக்குப் பிடிக்கவில்லை. அரசருக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று இருவரையும் சிறையில் அடைத்து விட்டனர். கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டன. கடுமையான காவல் வேறு! இருவரும் அதற்காகக் கவலைப்படவில்லை! சிறையிலும் கடவுளைப் பற்றிய பாடல்களையும், தேவதூதனின் வசனங்களையும், வேத வாக்கியங்களையும் பேசிக்கொண்டிருந்தனர். இறைவனை தினமும் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது! சிறையின் சுவர்கள் இடிந்து விழுந்தன! பூட்டியிருந்த கம்பிக் கதவுகளும் கீழே சரிந்தன! பவுல், மற்றும் சீலாவின் வலங்குகளும் அறுந்துவிட்டன! 
சிறைக்காவலர் விழித்தெழுந்தார்! சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருந்ததைப் பார்த்தார். கைதிகள் தப்பியோடிருப்பர் எனக் கருதினார்! கைதிகளைத் தப்பியோடவிட்டால் சிறைக்காவலர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் காலம் அது! 
அரசருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறைக்காவலர் வாளை உருவி, தற்கொலை செய்து கொள்ளப்போனார்! 
இதைப் பார்த்த பவுல், உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ""நீர் உமக்குத் தீங்கு செய்து கொள்ளாதீர்!....நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம்!....தப்பி ஓடவில்லை!'' என்றனர். 
சிறை அதிகாரி ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றியதற்காக நன்றி செலுத்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →