அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.
- திருக்குறள்
தீமை செய்யும் நண்பனைத்
திருந்து வாழச் செய்திட
வருத்தப் படுத்தும் சொற்களால்
இடித்துச் சொல்வது இனியது!
கடிந்து சொல்லி வாழும் முறை
கற்றுத் தரும் அறிவுடைய
நல்ல நண்பனின் தொடர்பினை
ஏற்றுக் கொள்வது இனியது.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்