1. பாளை போல பூ பூக்கும், பார்த்தவருக்கு விருப்பமூட்டும், தலையிலே சூடாதது என்ன பூ?
2. யானை படுக்க நிழல் உண்டு, கடுகு மடிக்க இலை இல்லை...
3. சிறகில்லாத பறவை, தேசமெங்கும் திரியும்...
4. அந்தரத்தில் தொங்குது சொம்பும் தண்ணீரும்...
5. பையில் இது இருந்தால், வேறு எதுவும் இருக்காது...
6. நூறு கிளிக்கு ஒரே வாய்...
7. பயந்தால் விட மாட்டான், பழகினால் மறக்க மாட் டான்...
8. உச்சிக் கிளையிலே சாட்டை தொங்குது...
9. ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன், ஊருக்கு செல்லப் பிள்ளை... இவன் யார்?
-ரொசிட்டா
1. வாழைப்பூ, 2. சவுக்கு மரம், 3. கடிதம்,
4. இளநீர்க்காய், 5. கிழிசல், 6. வாழைப்பூ,
7. நாய், 8. முருங்கை, 9. வெற்றிலை