முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  36: நினைவாற்றல்! 

அப்பா பணிதான் சென்னையிலேஅம்மா பணியும் மதுரையிலேகார்த்திகேயன், திவ்யப்ரபா - தம்பதியின் 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

அப்பா பணிதான் சென்னையிலே
அம்மா பணியும் மதுரையிலே
கார்த்திகேயன், திவ்யப்ரபா - தம்பதியின் 
அன்பு மகளாம் காவ்யாஸ்ரீ!

ஒன்றரை வயதில் அவரும்தான் 
பேசிப் பழகத் தொடங்குகையில்
நின்று கேட்ட அம்மாவும்
நினைவாற்றல் கண்டு அதிசயித்தார்!

வண்ணம் தீட்டிய அட்டைகளை 
முதலில் காட்ட நிறம் சொன்னார்!
எண்ணிப் பார்த்து படிப்படியாய்
பறவைகள், விலங்குகள் பெயர் சொன்னார்!

பார்த்து அறிந்த திறமையினை 
பக்குவமாக வளர்த்திடவே
ஆர்வம் கொண்ட அம்மாதான் 
அதிகம் இணையத்தில் ஆராய்ந்தார்!

இணையத்தில் அவர்போல் ஒரு சிறுமி
இருந்தார் அவர் போல் தம் மகளை
இணையாய் ஆக்க அன்று முதல் 
எடுத்த முயற்சிகள் ஏராளம்!

பத்து நாட்கள் பயிற்சியிலே 
"பாரதம்' உட்பட பல நாட்டின் 
சொந்தமான தேசியக் கொடிகளிலே 
நாற்பத்தி ரெண்டைக் கற்பித்தார்!

கொடியை எடுத்துக் காட்டிவிட்டால்
நாட்டின் பெயரைக் கூறிடுவார்!
அடுத்து நாட்டின் பெயர் சொன்னால்
அவற்றின் கொடியைக் காட்டிடுவார்!

மதுரையில் நடந்த ஒரு நிகழ்வில்
வேல்டு நிறுவனம் முன்னிலையில் 
இதுவரை வளர்த்த இத்திறனை 
யாவரும் அறியச் செயிதிட்டார்!

திரண்ட அறிவு படைத்தவர்கள் 
உலக சாதனைச் சான்றிதழை 
இரண்டு வயது "காவ்யாஸ்ரீ' க்கு
இனிதே வழங்கிச் சிறப்பித்தார்!

கற்றுக் கொடுத்த பெற்றோர்க்கும் 
"கல்விச் சாதனை' விருதினையே 
பெற்றுக் கொண்ட சிறுமிக்கும்
பெருமையாய்ச் சொல்வோம் பாராட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.