சிறுவர்மணி

நேர்முகத் தேர்வு!

DIN

அந்த இளைஞன் நன்றாக உடை உடுத்திக் கொண்டிருந்தான். அவன் பெயர் சுந்தர். இன்று அவனுக்கு நேர்முகத் தேர்வு! அதற்காக அவன் ஒரு அலுவலத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். 
"சுந்தர்!'' ....பியூனின் குரல். 
"நான்தான்!'' சுந்தர் எழுந்திருந்தான். 
"உங்களை உள்ளே கூப்பிடறாங்க....'' 
உள்ளே சென்றான் சுந்தர். நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரி சுந்தரிடம், "சுத்தத்தைப் பொறுத்தவரையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்!...'' என்றார்.
"நானும்தான் சார்'' 
"நீங்கள் இந்த அறைக்குள் நுழையும் முன் கதவருகில் உள்ள மிதியடியில் உங்கள் ஷூவை துடைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!...'' என்றார்.
"ஆமாம் சார்....நன்றாகத் துடைத்துக்கொண்டுதான் வந்தேன்!...'' என்றான் சுந்தர்.
அதிகாரி அமைதியாக சுந்தரைப் பார்த்து, "நேர்மையிலும் நான் மிகவும் கவனமாக இருப்பேன்!.... கதவருகே மிதியடியே இல்லை.... நீங்கள் போகலாம்!....'' எனறார்.
- அண்ணாமலையான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT