சிறுவர்மணி

நேருவின் பொன்மொழிகள்!

ஆர். மகாதேவன்

இன்றைய  குழந்தைகளே நாளைய இந்தியாவை அமைப்பவர்கள்! குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்தே நாட்டின் எதிர்காலம் அமையும்!

அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும்!

உலக வரலாற்றைப் படிப்பது சிறப்பு! அதனினும் சிறப்பு உலகில் வரலாற்றைப் படைப்பது!

நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது! அறிவில்லாத நற்பண்போ பயனற்றது!

வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே! 

திட்டமிடப்படாத செயல் துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது!

நல்ல கருத்துக்களைப் பேசுபவன் விதைக்கிறான்! கேட்பவன் அதை அறுவடை செய்கிறான்!

கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும்தான் போக்க முடியும்!

அறிவுள்ள அதிகாரம்  சிறப்புறும்!

மனித சமுதாயத்தின் முன்னேற்றம் அதன் பண்பால் வரையறுக்கப்படுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT