சிறுவர்மணி

காக்கை  சொன்ன பாடம்!

குயில், மரத்தில் இருந்தபடிபாட்டுப் பாடுது;  சின்னக்குருவிகளும் கிளையில் இருந்து

கிருங்கை சேதுபதி

குயில், மரத்தில் இருந்தபடி
பாட்டுப் பாடுது;  சின்னக்
குருவிகளும் கிளையில் இருந்து
பாட்டுக் கேட்குது;

மயில், தனது தோகை விரித்(து)
ஆடிக் காட்டுது; வேப்ப
மரம், தனது கிளைகள் ஆட்டிப்
பூக்கள் தூவுது;

பயில்வதற்குப் பள்ளிசெல்லும்
பிள்ளைகள் போலே வெகு
பரபரப்பாய் எறும்புக் கூட்டம்
விரைந்து போகுது!

வெயில், மிகுந்து தரையைச் சூடு
ஆக்கிவிட்டது ; நிழல்
விரித்த மரக் கூட்டத் தாலே
காற்றும் வந்தது!

காற்று வந்து சொன்ன சேதி
கேட்டுக் கொண்டுதான் அந்தக்
காக்கை கூட்டம் ஊர் முழுக்கக்
கத்திச் சொல்லுதே!

"நேற்றுப் போல, இன்றும் வீட்டில்
இருக்க வேண்டுமாம் தொற்று
நோய்ப டர்ந்து பரவி டாமல்
காக்க வேண்டுமாம்!

"காகா" "காகா"  என்று காக்கை
கத்தும் ஓசைதான் நம்மைக்
காக்கும் நல்ல மந்திரமாம்"
கிளியும் சொல்லுது!

ஆகா, இந்தக் காக்கை சொன்ன
படி எல்லாரும்  நாம்
அவரவரின் வீட்டுக்குள்ளே 
அடங்கி வாழ்வோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT