சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் விழாக்காலங்களில் உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த மான, சுவையான பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...
1. அக்கால அரசர்கள் இதில் பயணிப்பார்கள்...
2. பூமித்தாயை இப்படியும் அழைப்பார்கள்...
3. பெயரில் காரம் இருந்தாலும் சரியான சமயத்தைச் சொல்லும்...
4. முருகப் பெருமானை இந்தப் பெயரிலும் அழைப் பார்கள்...
5. இரு பெரும் காவியங்களில் ஒன்று...
விடை:
Advertisement
கட்டங்களில் வரும்
சொற்கள்
1. பல்லக்கு,
2. நிலமகள்,
3. கடிகாரம்,
4. சரவணன்,
5. ராமாயணம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல் : பலகாரம்