முகப்பு
சிறுவர்மணி

 பொன்மொழிகள்

பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ எந்த விதக் குற்றமும் செய்யாமல் நடந்துகொள்! 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ எந்த விதக் குற்றமும் செய்யாமல் நடந்துகொள்! 
- வடலூர் இராமலிங்க வள்ளலார்

நினைத்ததை அடைவதற்காக தீய வழியில் செல்லாதே. 
- யாரோ

நாம் அறிந்து கொள்ளாதவை மற்றும் புரிந்து கொள்ளாதவை, நம்முடையவை அல்ல. 
- கதே

தேவை ஏற்படும் பொழுது நண்பர்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்படும். 
- யாரோ

மற்றவர்களின் துன்பங்களை உணர முடியாதவன் மனிதத் தோற்றமுள்ள விலங்காவான். 
- ஜூவெலின்

கடமைகள் நம்முடையவை. நிகழ்வுகள் கடவுளுடையவை. 
- ùஸஸில்

ஆசையுள்ளவன் கைகளில் அவன் அறியாமலேயே விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்! 
- ஒரு மகான்

சேவை செய்யும்போது கைகள் புனிதமடைகின்றன.
 - மனு

நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவனும் தன் பிம்பத்தைக் காட்டுகிறான்.
- சாக்ரடீஸ்

நற்குணங்களைத்தான் நான் ஞானம் என்று சொல்வேன் 
- கதே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.