முகப்பு
சிறுவர்மணி

பாப்பா!

அந்த நிலா வானை விட்டு இறங்கி வந்தது - இந்த அழகுப் பாப்பா உருவினிலே ஆடி வந்தது!

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

அந்த நிலா வானை விட்டு இறங்கி வந்தது - இந்த 
அழகுப் பாப்பா உருவினிலே ஆடி வந்தது!
செங்கழுநீர்ப் பூவைத் தானே முகத்தில் கொண்டது - மின்னும் 
சின்னப் பூவாம் நீலோற்பவம் கண்ணில் உள்ளது!

செந்தாமரைக் கொடியை விட்டு உடம்பில் பூத்தது - அந்தச் 
செம்பருத்திப் பாதம் அடி எடுத்து வைத்தது!
செந்தாழம்பூவும் கையில் மணத்தை வீசுது! - வண்ணச் 
செவ்வந்திப் பூ காதினிலே பூத்திருக்குது!

சிவந்த ரோசாப் பூவும் மெல்ல இதழை விரிக்குது - பூஞ்
சிரிப்பில் அந்த வானுலகச் சொர்க்கம் தெரியுது!
தவழ்ந்து வரும் அழகில் உள்ளம் கொள்ளை போகுது - பாப்பா 
தாவும் போது தூக்கி முத்தமிட்டால் இனிக்குது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.