தவம்
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:29 PM
அறத்துப்பால் - அதிகாரம் 27 - பாடல் 7
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.
- திருக்குறள்
உலையில் ஊதித் தங்கத்தை
நகைகளாகச் செய்கிறார்
சுட்டுச் சுட்டுப் புடம் போட்டு
தங்கத்தை ஒளி பெறச் செய்கிறார்
Advertisement
தியாகத் தவம் செய்பவரை
துன்பம் தொடர்ந்து சுட்டிடும்
துயரம் வருத்திய போதும் அவர்
தூயவராகவே இருப்பார்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்