சிறுவர்மணி

அஞ்சல் சேவை!

கே.பி.பத்மநாபன்


அஞ்சல் சேவை செய்பவர்கள் 
அயரா உழைப்பில் உயர்ந்தவர்கள்
அஞ்சுகின்ற வெயில்தனிலும் 
அவர்தம் சேவை நிற்பதில்லை!

இடியும் மழையும் இருந்தாலென்?
இவர்தம் சேவை தொடர்ந்திடுமே!
கடிதில் கடிதம் சேர்ப்பதற்கு 
கடினமாகத் தாமுழைப்பார்

கடிதம் என்னும் இலக்கியத்தால் 
காசினியையே இணைத்திடுவர்!
படிப்போர்க்கெல்லாம் மகிழ்வூட்டும் 
பணிக்காய் நன்றாய் உழைத்திடுவார்!

உறவு நட்பு மனிதத்தை 
உணர்த்தும் கடிதப் பாலத்தை 
திறமையோடு கட்டுகிற 
தெய்வம் அஞ்சல்காரர்தான்!

அனைத்துத் தொடர்பாய் அலைபேசி 
அறிவுத் தொடர்பாய் வலைத்தளங்கள் 
அனைத்தும் இங்கே இருந்தாலென்?
அஞ்சல் அட்டை ஆனந்தம்!

கடிதம் எழுதும் பழக்கத்தை 
கண்டிப்பாகத் தொடர்ந்திடுவீர்!
மடியில் கணினி இருந்தாலும் 
மனதின் மகிழ்ச்சி கடிதம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT