புட்டு விற்க மணி அடித்துப்
பூமிநாதன் வருகிறான்!
புட்டுப் புட்டு வைக்கும் பேச்சில்
புட்டு முழுதும் விற்கிறான்!
சிரித்து விற்கும் தந்தி ரத்தால்
புட்டு நிறைய விற்குது!
அரிசிப் புட்டு, வரகுப் புட்டு
அதிகமாக விற்குது!
தேங்காய்ப்பூ சர்க்கரைதான்
தேடி நாக்கை இழுக்குது!
தெவிட்டாத சுவையினாலே
தினமும் வாங்கத் தூண்டுது!
கொஞ்ச நேரம் ஆவதற்குள்
குழாய்ப் புட்டும் விற்றது!
அஞ்சலையும் உதிரிப்புட்டு
ஆசையோடு வாங்கினாள்!
நல்லதுதான் புட்டு இதை
நாளும் வாங்கித் தின்னுக்கோ!
வெல்லம் போல "அறிவு' சொல்வான்
விட்டுடாம வாங்கிக்கோ!
- பொன்னியின் செல்வன்