முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

இரவில் வரும் நிலா (சந்திரன்) சமயங்களில் பகலிலும் தெரிகிறதே, இது ஏன்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

இரவில் வரும் நிலா (சந்திரன்) சமயங்களில் பகலிலும் தெரிகிறதே, இது ஏன்?

பதில்: நிலா தானாக ஒளியை வீசுவதில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன். சூரியனிடம் ஒளியைக் கடன் வாங்கித்தான் நிலா பிரகாசிக்கிறது. அதாவது அதற்கு நேர் எதிரே உள்ள சூரியனின் ஒளியை ஒரு கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறது.

இப்படியிருக்கும்போது பகலிலும் சூரியன் எதிரே இருந்தால் அந்த ஒளியை வாங்கி நிலா பிரகாசிக்கத்தானே செய்யும்.

பகலில் நிலா பளிச்சிடுவதற்குக் காரணம் அது இருக்கும் கோணமும் பூமியிலிருந்து அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதையும் பொறுத்தது. நிலவும் சூரியனும் பூமிக்குப் பக்கமாக இருக்கும்போது நிலா பிரகாசிக்கும். நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவே பூமி வரும்போது சூரியனின் ஒளியை பூமி மறைத்து விடுவதால் பகலில் பல சமயங்களில் நிலா தெரிவதில்லை.  திடீரென்று காற்று கொஞ்சமாக இருக்கும் கிரகம் ஒன்றில் கொண்டு போய் விட்டால்தான் இந்த அழுத்தத்தை நாம் உணருவோமாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.