முகப்பு
சிறுவர்மணி

நம்மை ஆளும் பாரதி!

ஓடி விளையாடச் சொல்லி, ஒற்றுமையாய்க் கூடச் சொல்லி - நம்மைப் பாடி மகிழ வைத்தார் பாரதி! - தமிழ்ப் பாரதத்தில் ஏறி வந்தார் பாரதி!

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:


ஓடி விளையாடச் சொல்லி, ஒற்றுமையாய்க் கூடச் சொல்லி - நம்மைப் 
பாடி மகிழ வைத்தார் பாரதி! - தமிழ்ப் 
பாரதத்தில் ஏறி வந்தார் பாரதி!

அடிமை விலங்கொடிக்க, ஆண்மையோடு நிற்க வைத்து - நமக்குப்  
படி அமைத்துப் பாதை போட்ட பாரதி! - வெற்றிப் 
பாரதத்தைச் செதுக்கி வைத்த பாரதி!

சாதி, சமயச் சழக்கறுத்து, சமத்துவத்தின் நெறியுரைத்து - பொது 
நீதி சொல்லி நிமிர வைத்த பாரதி! - அந்த 
நீலவானாய்ப் பரந்தொளிர்ந்த பாரதி!

பாஞ்சாலி சபதமென்று, குயில் பாட்டு, கண்ணன் பாட்டாய் - செழும் 
பூஞ்சோலை நமக்களித்த பாரதி! - கிழக்கில் 
புத்தொளியார் எழுந்த கதிர் பாரதி!

சுதந்திரத்தாய், மனம் குளிர "வந்தே மாதரம்!'  என்று 
தேசமக்கள் முழங்க வைத்த பாரதி! - தமிழ்த் 
தென்றலாக நம்மை ஆளும் பாரதி! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.