நம்மை ஆளும் பாரதி!
ஓடி விளையாடச் சொல்லி, ஒற்றுமையாய்க் கூடச் சொல்லி - நம்மைப் பாடி மகிழ வைத்தார் பாரதி! - தமிழ்ப் பாரதத்தில் ஏறி வந்தார் பாரதி!
ஓடி விளையாடச் சொல்லி, ஒற்றுமையாய்க் கூடச் சொல்லி - நம்மைப்
பாடி மகிழ வைத்தார் பாரதி! - தமிழ்ப்
பாரதத்தில் ஏறி வந்தார் பாரதி!
அடிமை விலங்கொடிக்க, ஆண்மையோடு நிற்க வைத்து - நமக்குப்
படி அமைத்துப் பாதை போட்ட பாரதி! - வெற்றிப்
பாரதத்தைச் செதுக்கி வைத்த பாரதி!
சாதி, சமயச் சழக்கறுத்து, சமத்துவத்தின் நெறியுரைத்து - பொது
நீதி சொல்லி நிமிர வைத்த பாரதி! - அந்த
நீலவானாய்ப் பரந்தொளிர்ந்த பாரதி!
பாஞ்சாலி சபதமென்று, குயில் பாட்டு, கண்ணன் பாட்டாய் - செழும்
பூஞ்சோலை நமக்களித்த பாரதி! - கிழக்கில்
புத்தொளியார் எழுந்த கதிர் பாரதி!
சுதந்திரத்தாய், மனம் குளிர "வந்தே மாதரம்!' என்று
தேசமக்கள் முழங்க வைத்த பாரதி! - தமிழ்த்
தென்றலாக நம்மை ஆளும் பாரதி!