கடவுள் வாழ்த்து
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
அறத்துப்பால் - அதிகாரம் 1 - பாடல் 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
- திருக்குறள்
அறக்கடலாய் மனம் குளிர்ந்து
அமைந்திருக்கும் இறைவனின்
அடி சேர்ந்தால் அமைதியுண்டு
பிறவிக் கடல் நீந்தலாம்
இறைவனடி எண்ணாமல்
பிறவிப் பெருங்கடலிலே
நீந்திச் செல்ல இயலாது
சாதனை செய்ய முடியாது
Advertisement
-ஆசி.கண்ணம்பிரத்தினம்