முகப்பு
கேரளம்

கேரள தேர்தல்: பாஜக - எல்டிஎஃப் இடையே ரகசிய ஒப்பந்தம்! பிரியங்கா காந்தி தாக்கு!

பாஜக - எல்டிஎஃப் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசியது குறித்து...

Updated On : 6 ஏப்ரல் 2026, 6:20 pm IST
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி - ANI
பகிர்:

பாரதிய ஜனதா கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் (எல்.டி.எஃப்.) இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளம், கண்ணூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “பாரதிய ஜனதா கட்சிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதனால் தான் சபரிமலை கோயிலில் அதிகளவிலான தங்க முறைகேடு நடந்தபோதிலும் அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

Advertisement

Advertisement

நான் தற்போது வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளேன். ஆகையால் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அருகில் இருந்து காண்கிறேன். உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக நீங்கள் எவ்வளவு சிரமங்களை சந்தித்து வருகிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

மேலும், கேரளாவில் இளைஞர்களை அதிகம் சந்திக்கிறேன். அதில் பெரும்பாலோனோர் படித்தவர்களாக உள்ளனர். ஆனால் பலபேரிடம் வேலை இல்லை. அப்படி வேலை செய்தாலும் அவர்கள் வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.

summary

Congress MP Priyanka Gandhi has stated that there is a secret pact between the Bharatiya Janata Party and the Left Democratic Front (LDF).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.