சிறுவர்மணி

வள்ளலாரை  போற்றுவோம்!

இராமலிங்க வள்ளலாரைபோற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்கூறும் நல்ல வழியில் சென்று 

நம்பிக்கை நாகராஜன்


இராமலிங்க வள்ளலாரை
போற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்
கூறும் நல்ல வழியில் சென்று 
குறைகள் இன்றி வாழுவோம்!

உயிர்கள் போற்றும் உலகம் தன்னை 
உணர்வில் நிறுத்தல் வேண்டுமே! - அவர்
உரைத்த சொல்லின் நன்மை தன்னை 
உணர வேண்டும் நிச்சயம்!

வாடும் பயிரைக் கண்டபோது 
வாடி நின்றார் கருணையில்!
வாழும் முறைகள் வகுத்துப் பாடி 
வழிகள் நமக்குக் காட்டினார்!

கடை விரித்தேன் என்று சொல்லி 
கருத்தை விரித்த சேதியை - நாம் 
விடைகள் தெரிந்து விரைந்து நன்மை 
விளையும் செயலில் சேருவோம்!

அருளில் பெருகும் சோதி என்று 
அமைத்த வள்ளல் அடிகளை 
தொழுது பெருகி ஓங்கும் கருணை 
கொண்டு உயிர்கள் போற்றுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT