சிறுவர்மணி

கதைப் பாடல்கள்: எறும்பும் 

கல்லைத் தமிழரசன்


கட்டெறும்பு ஓடை நீரில் அடித்துச் சென்றதாம்!
கண்டு பாவம் என்று புறா இலையைப் போட்டதாம்!
சட்டென்றெறும்பு அதனைப் பற்றி  ஏறிக்கொண்டதாம்!
தாவிக் கரையின் புல்லைப் பிடித்து உயிர் பிழைத்ததாம்!

வேடன் ஒருவன் வேட்டையாட விரைந்து வந்தானாம்!
வெள்ளைப் புறாவைக் கொல்வதற்கு குறியும் பார்த்தானாம்!
ஓடி வந்து எறும்பு அவன்காலைக் கடித்ததாம்!
வேடன் வில்லைக் கீழே போட்டு  "அம்மா' என்றானாம்!

சத்தம் கேட்டுப் புறாவும் மரத்தை விட்டுப் பறந்ததாம்!
சந்தோஷமாய் ஒன்றுக்கொன்று உதவி வாழ்ந்ததாம்!
நித்தம் நாமும் ஒருவர்க்கொருவர் உதவி செய்யுவோம்!
நேயத்தோடு உலகில் என்றும் மகிழ்ந்து வாழுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT