ஆள்வினையுடைமை
மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள் உளாள் தாமரையினாள்
பொருட்பால் - அதிகாரம் 62 - பாடல் 7
மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள் உளாள் தாமரையினாள்
- திருக்குறள்
சோம்பலை மடியில் கட்டிக்கொண்டு
தூங்கிப் பொழுதைப் போக்கினால்
அவன் மடியில் வளர்ச்சியைக்
கெடுக்கும் மூதேவி தங்குவாள்
சோர்வில்லாமல் உழைப்பவன்
முயற்சியிலே செல்வத்தைப்
பெருக்குகின்ற திருமகள்
தங்கி வளங்கள் தந்திடுவாள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்