விடுகதைகள்
வெளியில் சென்றால் கூடவே வருவான், ஆனாலும் இவனால் பயன் ஒன்றும் இல்லை..
1. வெளியில் சென்றால் கூடவே வருவான், ஆனாலும் இவனால் பயன் ஒன்றும் இல்லை..
2. சின்னப் பெட்டியில் விரல் நாட்டியமாட சங்கீதம் வரும்...
3. உலகமெல்லாம் உறங்கச் சென்று விடும்... ஆனால் இவர்கள் மட்டும் உறங்க மாட்டார்கள்...
4. இரண்டு கைகள் உண்டு மனிதன் அல்ல, நான்கு
கால்கள் உண்டு விலங்கும் அல்ல...
5. பட்டணத்து கருவேல மரம்... வெட்ட வெட்ட
துளிர்க்கிறது...
6. தூரத்திலிருந்து பார்த்தால் ஐந்து கால்கள், பக்கத்தில் சென்று பார்த்தால் நான்கு கால்கள்...
7. ஊரெல்லாம் வளைந்து வளைந்து போகின்றனர்
இரட்டையர்...
8. தாடி வைத்த மூளைக்காரன், கோவிலுக்குப் போனால் வெள்ளைக்காரனாகி விடுகிறான்...
விடைகள்
1. நிழல்
2. ஆர்மோனியம்
3. கடிகார முட்கள்
4. நாற்காலி
5. தலைமுடி
6. யானை
7. தண்டவாளம்
8. தேங்காய்