சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வரும் சொல் நல்லறம் என்பதைக் குறிக்கும்... எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. இது வரும்போது புன்னகைக்கச் சொல்லியிருக்கிறார்கள்...
2. பேனா, பென்சில் போன்றவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயர்...
3. பூமித்தாயை இப்படியும் அழைப்பதுண்டு...
4. பறவைகளுக்கு இந்த இரண்டும் அவசியம்...
5. இந்தப் பழ சீசன் வந்துவிட்டது...ஜாலி...
-ரொசிட்டா
Advertisement
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. இடுக்கண்,
2. எழுதுகோல்,
3. நிலமகள்,
4. சிறகுகள்,
5. மாம்பழம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : இல்லறம்