சிறுவர்மணி

விழிப்பாய் இருக்கணும்!

கொரோனா தொற்று மக்களைகொன்று தவிக்க வைக்குது!வராமல் தொற்றைத் தடுக்கணும்

பா.சக்திவேல் பேராசிரியர்


கொரோனா தொற்று மக்களை
கொன்று தவிக்க வைக்குது!
வராமல் தொற்றைத் தடுக்கணும்
வாயை மூடிப் பேசணும்!

தொட்டு தொட்டுப் பேசாமல்
தூர நின்றுப் பேசணும்!
எட்டி விலகி இருக்கணும்
இடை வெளிகள் கொடுக்கணும்!

முகத்தில் கவசம் அணியணும்
மூலிகைக் குடிநீர் பருகணும்!
அகத்தில் சுத்தம் காக்கணும்
அரசு சொல்வதைக் கேட்கணும்!

தும்மல் இருமல் வந்தாலும்
துணியால் மூடித் தும்மணும்!
தும்மல் துளிகள் தன்னாலே
தொற்றிப் படரும் கிருமிகள்!

ஓடும் நீரில் கைகளை
ஒப்பாய் சோப்பால் கழுவணும்!
ஆடிப் பாடி சுத்தாமல்
அடங்கி வீட்டில் இருக்கணும்!

நாளும் விழிப்பாய் இருக்கணும்
நலத்தை காக்கப் பழக்கணும்!
மூளும் கொரோனா நோயினை
முற்றும் துரத்தி அடிக்கணும்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

SCROLL FOR NEXT