சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

மிகவும் ஆழமான கடலுக்கு அடியில் அப்படி என்னதான் இருக்கிறது, இருக்க முடியும்? ஏதாவது கண்டுபிடித்திருக்கிறார்களா?

ரொசிட்டா

கேள்வி: மிகவும் ஆழமான கடலுக்கு அடியில் அப்படி என்னதான் இருக்கிறது, இருக்க முடியும்? ஏதாவது கண்டுபிடித்திருக்கிறார்களா?

பதில்: மிகவும் ஆழமான கடலுக்குள் நாம் இதுவரை பார்த்திராத பல வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்துக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். அத்தனை பெயர்களும் வாயில் நுழையாதவை. ஆகவே பெயர்களை விட்டு விடுவோம்.

இவ்வளவு ஆழத்தில் இருக்கும் இந்த உயிரினங்கள் எதைச் சாப்பிட்டு வாழ்கின்றன? அந்த ஆழத்தில் இருக்கும் சில விநோதச் செடிகளால் பச்சையம் தயாரிக்கக் கூட முடியாது. ஏனென்றால், சூரிய ஒளி அங்கே படுவதே இல்லை. இங்குள்ள உயிரினங்களுக்கு உணவு - அந்த வினோதச் செடிகளின் அழுகிய இலைகளும் மக்கிய வேர்களும்தான். 

அப்புறம் இறந்த உயிரினங்களின் மக்கிய பாகங்களும்தான். பாவம் என்றுகூடச் சொல்ல முடியாது. ஆனாலும் இவையும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மிகவும் ஆழமான கடல் பகுதி "சேலஞ்சர் டீப்' என்று அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் ஆழம் எவ்வளவு தெரியுமா? 10,904 மீட்டர்கள் (36,070 அடிகள்). 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT