அன்பு அச்சமில்லாதது. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்.
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே.
வாய்மையைத் தவிர வேறு எந்த ராஜதந்திரமும் எனக்குத் தெரியாது.
மதம் என்பதன் உட்பொருள் சத்தியமும் அகிம்சையும்தான்.
மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதமும் இல்லை.
தன்னலமில்லாத செயல்களே ஒழுக்கமாகும்.
பணிவு இல்லாத வாய்மை செருக்கு மிகுந்த கேலிச் சித்திரம் ஆகும்.
பலவீனமானவன் பிறரை மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம்.
சிக்கனம்தான் பெரிய வருமானமாகும்.