புலால் மறுத்தல்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
அறத்துப்பால் அதிகாரம் 26 பாடல் 8
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
- திருக்குறள்
குற்றமின்றி வாழ்ந்திடும்
நல்லறிவு உள்ளவர்
உயிர் பிரிந்த உடலினை
உண்ண எண்ண மாட்டார்கள்
ஞானமுள்ள எவருமே
ஊனை உண்ண மாட்டார்கள்
மனத்தில் கருணை வளர்ப்பவர்
கறிவுணவை உண்ணார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்