சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?இந்த மேகங்கள் காற்றினாலும் நீரினாலும் ஆனவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

தினமணி


வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?

இந்த மேகங்கள் காற்றினாலும் நீரினாலும் ஆனவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நிலையில் இருக்கும் மேகத்தில் குட்டிக்குட்டியான நீர்த்திவலைகள் கோடிக்கணக்கில் இருக்கும். சூரியனின் வெளிச்சக் கதிர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அதாவது ஒளி எப்போதுமே பளிச்சென்று வெண்மையாக இருக்கிறது.

இந்த வெளிச்சக் கதிர்கள் மேகத்திலுள்ள நீர்த்திவலைகளில் பட்டவுடன் அந்த நீர்த்திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்து விடுகின்றன. 

அவ்வளவு நீர்த்திவலைகளும் வெளிச்சத்தை ஒன்றாகச் சேர்ந்து பிரதிபலிக்கும்போது அந்த மேகம் நமக்குப் பார்ப்பதற்கு வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT