FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

எவ்வாறு வாழவேண்டும்..!

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?

Updated On : 18 ஆகஸ்ட் 2024, 4:42 pm IST
பகிர்:

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?

ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே- நீ

ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே!

Advertisement

Advertisement

நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே- நம்

நல்லவர்கள் தூங்கும்படி வளர்ந்து விடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக் கூடாது- பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது!

மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது- தன்

மாமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது!

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேண்டும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேண்டும்- அறிவு

வளர்ச்சியாகவே வான்முகட்டைத் தொடவேணும்

வெற்றி மேல் வெற்றி வர விருதுவர பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேண்டும்

-தகவல்- தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments