பொன்மொழிகள்...
எந்த ஒரு தெளிவில்லாத வினாவுக்கும் மிகச் சிறந்த விடை மௌனம்தான்.
Updated On : 12 பிப்ரவரி, 2024 at 9:57 AM
எந்த ஒரு தெளிவில்லாத வினாவுக்கும் மிகச் சிறந்த விடை மௌனம்தான்.
எந்த ஒரு சூழ்நிலைக்கும் மிகச் சிறந்த எதிர்வினை-புன்னகை.
உன்னை வீழ்த்தும் அளவுக்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால் விதிகளை வீழ்த்தும் அளவுக்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும். தளராதே! துணிந்து செல்!!
-ஜனனி ரமணன்,
இராசிபுரம்.
அப்பாவிடம் தோற்றுப் போ!
Advertisement
- அறிவு மேம்படும்.
- துணைவியிடம் தோற்றுப் போ! மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- பிள்ளையிடம் தோற்றுப் போ! பாசம் பன்மடங்காகும்.
- சொந்தங்களிடம் தோற்றுப் போ! உறவு பலப்படும்.
- நண்பனிடம் தோற்றுப் போ! நட்பு உறுதிப்படும்.
ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
கோடம்பாக்கம்.
விடியுமென்று காத்திருக்காதே! உன்னால் முடியுமென்று சாதித்துக் காட்டு.
ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
போராடாமல் வேடிக்கை பார்த்தவர்களைவிட போராடி தோல்விகளைச் சந்தித்தவர்களும் வெற்றியாளர்கள்தான்!
மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.