பொன்மொழிகள்...
எந்த ஒரு தெளிவில்லாத வினாவுக்கும் மிகச் சிறந்த விடை மௌனம்தான்.
எந்த ஒரு தெளிவில்லாத வினாவுக்கும் மிகச் சிறந்த விடை மௌனம்தான்.
எந்த ஒரு சூழ்நிலைக்கும் மிகச் சிறந்த எதிர்வினை-புன்னகை.
உன்னை வீழ்த்தும் அளவுக்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால் விதிகளை வீழ்த்தும் அளவுக்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும். தளராதே! துணிந்து செல்!!
-ஜனனி ரமணன்,
இராசிபுரம்.
அப்பாவிடம் தோற்றுப் போ!
Advertisement
Advertisement
- அறிவு மேம்படும்.
- துணைவியிடம் தோற்றுப் போ! மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- பிள்ளையிடம் தோற்றுப் போ! பாசம் பன்மடங்காகும்.
- சொந்தங்களிடம் தோற்றுப் போ! உறவு பலப்படும்.
- நண்பனிடம் தோற்றுப் போ! நட்பு உறுதிப்படும்.
ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
கோடம்பாக்கம்.
விடியுமென்று காத்திருக்காதே! உன்னால் முடியுமென்று சாதித்துக் காட்டு.
ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
போராடாமல் வேடிக்கை பார்த்தவர்களைவிட போராடி தோல்விகளைச் சந்தித்தவர்களும் வெற்றியாளர்கள்தான்!
மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.