சிறுவர்மணி

கதை சொன்னவரின் கதை...

DIN

முயல், ஆமையின் கதை தெரியும். முயல் அலட்சியத்தால் தூங்கும்போது, ஆமை விடாமுயற்சியால் வெற்றி பெற்ற கதையை முதலில் சொன்னவர் ஈசாப். இவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.

அவர் பழங்காலத்தில் ஒரு கிரேக்க அரசரின் அடிமையாக இருந்தார். பார்ப்பதற்கு அழகில்லாமல் இருந்த ஈசாப்பில் தட்டிக் கதைகள் மக்களைக் கவர்ந்தன.

ஒரு சமயம் ஈசாப்பிடம் கிரேக்க மன்னர் சிறிது பணம் கொடுத்து, டெல்பி என்ற நகருக்கு அனுப்பினார். அந்த நகர மக்கள் பேராசைக்காரர்களாக இருந்தனர். ஈசாப்பிடம் உணவுக்காக நிறைய பணம் கேட்டனர்.

பணம் கேட்ட மக்களுக்காக ஈசாப், பொன் முட்டை இடும் வாத்தின் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு டெல்பி மக்கள் மனம் நொந்தனர்.

ஈசாப்பின் கதைகள் அறுநூறுக்கும் மேற்பட்டவை புழக்கத்தில் உள்ளன. வில்லியம் காக்ஸ்டன் என்பவர், 1484-ஆம் ஆண்டில் ஈசாப்பின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டார்.

ஈசாப் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் இருக்கிறது. ஈசாப்புக்கு ரோம் நகரில் ஒரு சிலை கூட இருக்கிறது.

ஈசாப்பின் "வெட்டுக்கிளியும் எறும்பும்', "திராட்சை புளிக்கும்' என்று சொன்ன நரியின் கதை வெகு பிரசித்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

SCROLL FOR NEXT