சிறுவர் பாடல்...
உழைப்பின்றி கனவுகள் நனவாகாது
ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை!
அன்பு சிறுவர்- சிறுமியர்களே!
உங்கள் மனதில் பதிவு செய்ய
இதோ சில உண்மைகள்!
உளி படாத கல்
சிலையாவது இல்லை!
தூரிகை தொடாத காகிதம்
ஓவியமானது இல்லை!
உழைப்பில்லாத கனவு
நனவாவது இல்லை!
கற்பனைவளமில்லா வரிகள்
கவிதையாவது இல்லை!
முயற்சியில்லாத வாழ்க்கை
முன்னேற்றமடைவது இல்லை!
மழைநீரில்லாத மண்
வளமாவது இல்லை!
சொல்லித் தராத கல்வி
சோபிப்பது இல்லை!
உண்மையில்லா வார்த்தைகள்
நிலைத்திருப்பது இல்லை.