மரங்கள்...
மரங்கள் யாவு மிங்கே நாம் பெற்ற வரங்கள் தம்பி
Updated On : 22 ஜூன், 2025 at 8:19 PM
மரங்கள் யாவு மிங்கே
நாம் பெற்ற வரங்கள் தம்பி
உயிர்களின் தாய்வீடன்றோ?
Advertisement
உணர்ந்துநீ மதிப்பாய் தம்பி!
--
மண்ணிலே நின்று தூயக்
காற்றினை வீசக் கண்டாய்
வண்ணநல் பறவைக் கூட்டம்
வாழ்ந்திடும் விடுதி யன்றே?
--
நிழலாகி கனிக ளாகி
இலவச மருந்து மாகி
மழைவர காரண மாகி
மனிதரைக் காக்கும் தம்பி!
--
இயற்கையாம் அன்னை மண்ணில்
எழுதிய காவியம் தம்பி!
நின்றஅதன் அழகுத் தோற்றம்
நிகரிலா ஓவியம் தம்பி!
பாவலர் கருமலைப்பழம் நீ