முருங்கை கீரையில் முழுமையாய் உள்ள
இரும்பு தாமிரம், சுண்ணாம்பு சத்துகள்
விரும்பி படித்ததை விரைந்து உணர்ந்து
திரும்பிச் சொல்லும் பல்லைப் பலப்படுத்தும்!
புரிந்துப் படித்ததை எல்லாம் துளசி
புத்தியில் பதித்து நினைவைக் கூட்டும்
விரைந்து விடையைத் தேர்வில் எழுதி
நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர வைக்கும்!
வல்லாரை இலைசாற்றில் வடியும் தேன்கலந்து
சில்லென்று சிறுவருக்குச் சீராய் கொடுத்தால்
நல்ல முறையில் சிந்தித்து உணரும்
நினைவு ஆற்றல் நிறையவே பெருகும்!
மு.அ.அபுல் அமீன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.